ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சிதம்பரத்தின் ஜாமீன் மனு நீதிபதிகள் ஆர். பானுமதி மர்றும் ரிஷ்கேஷ் ராய் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரிக்கப்படவுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சிதம்பரம் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது நீதிமன்றக் காவலை வரும் 17-ம் தேதிவரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்த போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐயும், அமலாக்கத்துறையும் வழக்குகள் பதிவு செய்துள்ளன.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்