விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைந்து வருவதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ அனுப்பி வைத்த விக்ரம் லேண்டர் கடைசி நேரத்தில் தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதனால் மிகுந்த ஏமாற்றமடைந்த இஸ்ரோ விஞ்ஞானிகள் விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர். இஸ்ரோவுடன் கைகோர்த்த அமெரிக்காவின் நாசாவும், ஹலோ விக்ரம் என குறுஞ்செய்தி அனுப்பி வைத்து தொடர்பு கொள்ள முயன்றது.
மேலும், நிலவின் தென் துருவம் அருகே வந்த நாசாவின் ஆர்பிட்டர் மூலமும் தொடர்பு கொள்ள முயற்சி எடுக்கப்பட்டது. அதன் முயற்சியும் பலன் அளிக்காததால் இறுதியாக நாசாவின் 60 மீட்டர் பெரிய ஆன்டெனா உதவியுடன் சிக்னல்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அதற்கும் விக்ரம் லேண்டரிடம் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை.
இந்நிலையில், அடுத்த 5 நாட்களுக்கு மட்டுமே நிலவில் பகல் பொழுது இருக்கும் என்பதால், லேண்டரை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்புகள் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். அதே சமயம் லேண்டரை தொடர்பு கொள்வதற்கான பணிகள் நடைபெறும் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
'சென்னைக்கு வெள்ள அபாயம்!' - காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு ஏன்?
“30 தொகுதியில் வெற்றி, இல்லையேல் மேடையிலேயே தற்கொலை” திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் ஆவேச பேச்சு
பருவம் தாண்டி ஓயாமல் கொட்டிய கனமழை: நீரில் மூழ்கிய பயிர்களால் கண்ணீர் கடலில் விவசாயிகள்!
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்