திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் இரண்டாவது நாளாக நடத்தி வந்த போராட்டத்தை அப்பகுதி மக்கள் வாபஸ் பெற்றுள்ளனர்.
திருப்பூ மாவட்டம், சாமளாபுரத்தில் மதுக்கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பெண்கள் மீதும் காவல்துறை அதிகாரிகள் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவரை காவல்துறை அதிகாரி கன்னத்திலும் அறைந்தார். காவல் துறையினரின் இந்த அராஜக போக்கைக் கண்டித்து அப்பகுதி பெண்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நேற்று தொடங்கிய உண்ணாவிரத போராட்டம் இன்றும் தொடர்ந்தது.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையினரால் தாக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 28 பேரை இன்று அதிகாலை கைது செய்த காவல்துறையினர் அவர்களை மாலையில் விடுவித்தனர். இந்நிலையில் தாக்குதல் நடத்திய கூடுதல் காவல்துறை துணைக்கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
Loading More post
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
தொகுதி பங்கீடு: அதிமுக மீது தேமுதிக அதிருப்தி?
பிரதமர் மோடிக்கு கொரோனா தடுப்பூசி செலுத்திய அனுபவத்தை பகிர்ந்த புதுச்சேரி செவிலியர்!
தலைவாசல் சுங்கச்சாவடி மீது தாக்குதல் : தமிழக வாழ்வுரிமை கட்சி மீது புகார்... நடந்தது என்ன?
காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?- ராஜேஸ் தாஸ் விவகாரத்தை விசாரிக்கும் நீதிமன்றம்
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?
கவுன்டவுனை தொடங்கிய கமல்: மூன்றாம் அணி இலக்கை நெருங்குகிறதா மக்கள் நீதி மய்யம்?
குழந்தைகளுக்கு தேவையான 'வைட்டமின் டி' உடலில் சேருவதை உறுதிசெய்வது எப்படி? - ஒரு வழிகாட்டி