பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ரூ.14 கோடியை இழப்பீடாக கொடுக்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் வாரியம் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாத பிரச்னை காரணமாக பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் தொடர் நடத்துவதை நிறுத்திவிட்டது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் பங்கேற்று ஆடி வருகின்றன.
இந்நிலையில் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஏற்கனவே போடப்பட்ட ஒப்பந்தந்தத்தி ன்படி, இரு தரப்பு தொடரை நடத்த இந்தியா மறுத்துவிட்டது. இதனால் தங்களுக்கு ஏற்பட்ட இழப்புக்காக இந்திய கிரிக்கெட் வாரியம், 63 மில்லியன் டாலர் (சுமார் ரூ.446 கோடி) வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தீர்ப்பாயத்தில் புகார் கூறியிருந்தது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம் அந்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது.
(பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் எஹசன் மணி)
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம், இந்த வழக்குக்காக தாங்கள் செலவழித்த தொகையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கொடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்தது. இதையடுத்து, ‘இந்திய கிரிக்கெட் வாரியம் செலவழித்த தொகை யில் 60 சதவிகிதத்தை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செலுத்தவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கிய குழுவின் செலவுத் தொகையையும் சேர்த்து கொடுக்க வேண்டும்’’ என்றும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இந்த தொகை 2 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 14 கோடி) என்று கூறப்படுகிறது.
Loading More post
நிரவ் மோடியை இந்தியா அழைத்துவர இங்கிலாந்து உள்துறை அமைச்சர் அனுமதி
தீபக் சாஹர் அசத்தல் பவுலிங்! சென்னையின் வெற்றிக்கு 107 ரன்கள் இலக்கு
தமிழகத்தில் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்க முடிவு?
"கொரோனாவை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்"- தமிழிசை சவுந்தரராஜன்
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 8000ஐ தாண்டியது; ஒரே நாளில் 33 பேர் உயிரிழப்பு!
இந்தியாவில் இருந்து வெளியேறுகிறது 'சிட்டி பேங்க்' - சேவையில் பாதிப்பு இல்லை... ஏன்?
டாஸ் வென்றால் பீல்டிங் தேர்வு... தப்புக் கணக்கு போடும் அணிகள்... மாறும் முடிவுகள்!
கோவாக்சின் Vs கோவிஷீல்டு Vs ஸ்புட்னிக்-வி: கொரோனா தடுப்பூசிகளின் வேறுபாடுகள்- ஒரு பார்வை
கடும் கொரோனா பாதிப்பைக் குறைக்க உதவும் தினசரி உடற்பயிற்சி: ஆய்வும் வழிகாட்டுதலும்