தருமபுரியில் பாலியல் வன்கொடுமையில் பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்பவர் கைதான நிலையில், தேடப்பட்ட மற்றொரு நபர் ரமேஷ் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
தருமபுரி பாப்பிரெட்டிபட்டியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி தீபாவளிக்காக தனது ஊருக்கு வந்துள்ளார். அப்போது, அதே ஊரைச் சேர்ந்த சதீஷ், ரமேஷ் என்ற இரண்டு இளைஞர்கள் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில், தனது மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது குறித்து காவல்துறையினரிடம் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைகழித்ததாக அவரது பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி 5 நாட்களுக்குப் பிறகு மாணவி பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சதீஷ், ரமேஷ் ஆகிய இருவரும் தலைமறைவாகினர். இதனையடுத்து, தலைமறைவான இருவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், மெத்தனமாக இருந்த காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் அந்தக் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என ஆட்சியர் உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.
இதைத்தொடர்ந்து மாணவி பாலியல் வன்கொடுமையில் உயிரிழந்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த சதீஷ் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவருடன் இணைந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்பட்ட ரமேஷ் என்பவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த ரமேஷ், சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Loading More post
குடல் இறக்க அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்!
முக்கியச் செய்திகள்: அச்சுறுத்தும் கொரோனா 2-ம் அலை முதல் சென்னை அணியின் வெற்றி வரை
தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து - மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் இன்று சென்னை வருகை!
ஜடேஜா -மொயின் அலி அசத்தல் பந்துவீச்சு! ராஜஸ்தானை 45 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை!
மேக்ஸ்வெல் வரவு - தொடர் வெற்றி : பெங்களூர் அணியின் ‘ஈ சாலா கப் நம்தே’ கனவு பலிக்குமா?
கொரோனா 2-ம் அலையின் மோசமான பாதிப்பை இந்தியா தடுக்கத் தவறியது எப்படி? - ஒரு பார்வை
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு பலன் தருமா? - ஒரு பார்வை
'தயவுசெய்து, முகக்கவசம் அணிவீர்’- உலுக்கும் தகவலுடன் இன்ஸ்டா பதிவில் மருத்துவர் வேண்டுகோள்