லண்டனில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரோபோ மூலம் மருத்துவர் ஒருவர், தனி வகுப்புகளை நடத்தி வருகிறார். இந்த சிகிச்சைக்கு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
குழந்தை உருவம் கொண்ட இந்த காஸ்பர் ரோபோ, ஆட்டிசம் என்னும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும், மன இருக்கத்தில் இருக்கும் சாதாரண குழந்தைகளுக்கும் சிகிச்சை அளிக்கிறது. லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் பென் ராபின்ஸ், இந்த ரோபோவை உருவாக்கியுள்ளார்.
அனைத்து விஷயங்களையும் இந்த ரோபோ ஆட்டிச குழந்தைகளுக்கு எளிமையாகப் புரிய வைக்கிறது. காஸ்பர் உதவியுடன் குழந்தைகள் பல விஷயங்களைத் துல்லியமாக யூகித்து விடுகின்றனர். குழந்தையின் நிலையை முன்கூட்டியே அறிந்து அவர்களது தேவையையும் பாதுகாப்பையும் காஸ்பர் ரோபோ கற்றுத் தருகிறது.
சாப்பிட முரண்டு பிடிக்கும் குழந்தைகளை உண்ண வைக்கிறது. வகுப்பறையில் குழந்தைகளுடன் பேச்சு கொடுத்துக் கொண்டே, உணவு உண்ணச் செய்கிறது. காஸ்பர் ரோபோவிடம் பழகும் குழந்தைகளின் மனநிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண முடிகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறு குழந்தை போல் உருவம் கொண்ட இந்த ரோபோ, பாட்டு, நடனம், விளையாட்டு, எப்படி சாப்பிடுவது என்பன போன்ற பல செயல்களைச் செய்து காட்டுகிறது. இதை அப்படியே ஆட்டிசம் குழந்தைகளும் பின்தொடர்ந்து செய்கிறார்கள்.
ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண் குழந்தைகளை அறிமுகம் இல்லாதவர்கள் சந்திக்கும்போது எப்படி பாதுகாப்பாக நடந்துகொள்வது போன்ற சமூக அக்கறையுடன் கூடிய பயிற்சியை வழங்கும் வகையில் காஸ்பர் ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான தனிப்பட்ட விஷயங்களை புரிய வைப்பதையும் இந்த ரோபோ கற்றுக்கொடுக்கிறது.
ரிமோட் கன்ட்ரோல் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோ, ஓர் ஆசிரியர் மற்றும் ஒரு மருத்துவரின் அறிவையும், ஆற்றல் நுணுக்கங்களையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் காஸ்பர் ரோபோவுக்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.
Loading More post
ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்: ஓபிஎஸ் - வீடியோ
சசிகலா விடுதலையை கொண்டாடவே ஜெயலலிதா நினைவிடம் திறப்பு - டிடிவி தினகரன்
விவசாயிகள் உடனான பேச்சுவார்த்தை இனி தொடருமா? - வன்முறைக்குப் பின் 'கடுமை' காட்டும் அரசு!
சீர்காழி: 2 பேரை கொன்றுவிட்டு நகை கொள்ளை - கொள்ளையரை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்!
ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி!
முல்லைப் பெரியாறு உறுதித்தன்மை எத்தகையது? - பழம்பெரும் அணைகளும் ஐ.நா 'அலர்ட்'டும்!
டெல்லி டிராக்டர் பேரணிக்கு ஆதரவு: தமிழகத்தின் பல இடங்களில் விவசாயிகள் பேரணி!
PT Exclusive: "ரிமோட் மூலம் இயங்கும் அரசை தமிழகம் விரும்பாது!" - ராகுல் காந்தி நேர்காணல்
சசிகலா பதவியேற்புக்கு எதிர்ப்பு.... பதவியை ராஜினாமா செய்த நிர்வாகிகள்..!
இது சாதாரண ஆப் அல்ல, சூப்பர் செயலி! - 'பீப்பர்' மெசேஜிங் பாலத்தின் வியத்தகு பின்னணி