ஆதார் தகவல் தொகுப்பில் ஊடுருவ முடியாது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
கோவாவில் தகவல் தொழில்நுட்பக் கொள்கையை வெளியிட்டுப் பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆதார் தகவல் தொகுப்புகள் முற்றிலும் பாதுகாப்பானது என்று தெரிவித்தார். ஆதார் அட்டையில் புகைப்படம், பாலினம், நிரந்தர முகவரி ஆகியவற்றைத் தவிர என்ன இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய ரவிசங்கர் பிரசாத், கைரேகைகள், கண் விழித்திரை ஆகியவற்றின் மூலம் மட்டுமே மற்ற தகவல்களை அறிய முடியும் என்பதால் ரகசியம் காக்கப்படுவதில் பிரச்னையில்லை என்றும் தெரிவித்தார்.
நாடாளுமன்ற ஒப்புதலுடன் இதற்கான கடுமையான சட்டம் உள்ளதாகக் கூறிய அவர், கைரேகை மற்றும் விழித்திரை பதிவை யாருக்காவது அளித்து அது தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்த உதவினால் சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்றும் தெரிவித்தார். ஆதார் தகவல்களை அரசு பாதுகாப்பதால், நூறு கோடி முறை முயன்றாலும் அதில் ஊடுருவ முடியாது என்றும் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
Loading More post
திருச்சி: மழைநீரில் மூழ்கி 50,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்; இழப்பீடு வழங்க கோரிக்கை
’’நான் நிச்சயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வேன்’’ - முதல்வர் பழனிசாமி
கொரோனா தடுப்பூசிக்கான ஒப்புதல் - ஏற்புப் படிவத்தில் கோவாக்சின் குறித்து இருப்பது என்ன?
தமிழகத்தில் முதல் தடுப்பூசியை செலுத்திக்கொண்டார் மதுரை மருத்துவர்!
"இரண்டும் பாதுகாப்பானவை; வதந்திகளை நம்பாதீர்! - கொரோனா தடுப்பூசி பணியை தொடங்கிவைத்த மோடி
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்
ஈஸ்வரன்... போதுமான பொழுதுபோக்கு அனுபவம் தந்ததா? - திரைப்பார்வை
சப்ஜெக்டில் மட்டும் சமூக அக்கறை போதுமா? - 'பூமி' என்னும் சினிமா எழுப்பும் கேள்விகள்!
"நாங்கள் அன்று அழுதோம், சிரித்தோம்..." - அஸ்வின் மனைவியின் உணர்வுபூர்வ பகிர்வு