அமெரிக்காவில் பள்ளிச்சிறுவன் சரமாரியாக சுட்டதில் 9 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் உயிரிழந்தனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சாண்டா ஃபே நகரில் உள்ள பள்ளியில் துப்பாக்கியுடன் நுழைந்த மாணவன் கண்மூடித்தனமாக நாலாபுறமும் சுட்டான். இதில் குண்டு பாய்ந்து 9 மாணவர்களும் ஒரு ஆசிரியரும் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து இறந்தனர். இது தவிர 10 மாணவர்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வெறித்தனமாக சுட்ட டிமிட்ரியோஸ் பகோர்ட்டிஸ் என்ற மாணவனை போலீசார் கைது செய்தனர். அமெரிக்காவில் கடந்த ஒரு வாரத்தில் பள்ளியில் நடக்கும் 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம் இதுவாகும். இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து மட்டும் 22 துப்பாக்கிச் சூடுகள் பள்ளிகளில் நடைபெற்றுள்ளன.
Loading More post
தேவேந்திரகுல வேளாளர் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!
கொரோனா பரவலை குறைக்க 10 முக்கிய வழிகள்: மருத்துவர் பிரதீப் கவுர் வழிகாட்டுதல்
மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களுக்கு ஊரடங்கு: முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு
வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92-இல் ஏப்.,17ம் தேதி மறுவாக்குப்பதிவு
ஈ.வெ.ரா. சாலை பெயர் பலகை சர்ச்சை: விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர்
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் மிகுந்திருப்பதின் பின்புலம் என்ன? - ஒரு பார்வை
கும்பமேளா: கங்கையில் புனித நீராடல்... கொரோனா 'கவலை' அதிகரிப்பது ஏன்?
2-ம் அலை தீவிரம்: சீரம், பாரத் பயோடெக் நிறுவன கொரோனா தடுப்பூசி உற்பத்தி நிலவரம் என்ன?
கோடை காலத்தில் உடற்பயிற்சி செய்கிறீர்களா? இவற்றையெல்லாம் கவனியுங்கள்!