சென்னையில் காவலர்கள் போல் நடித்து மூதாட்டியிடம் பணத்தை பறித்துச்சென்றவர்களை காவலர்கள் தேடி வருகின்றனர்.
சென்னை, மணலியில் உள்ள சாத்துமா நகரில் வசிப்பவர் மோகனா (72). இவர் பணி ஓய்வு பெற்றவர். இந்நிலையில் வைப்புநிதி கணக்கு தொடர்பாக, ராயப்பேட்டையில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வீட்டிற்கு செல்வதற்காக ராயப்பேட்டை பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த இரண்டு நபர்கள், தாங்கள் காவலர்கள் என்று கூறி மோகனாவை அழைத்துள்ளனர். மோகனாவிடம் பேசிய அவர்கள், ‘இந்தப் பகுதியில் நகை திருட்டு அதிகம். இந்த மாதிரி எல்லாம் கழுத்துல நகையை போடாதீங்க. நகையை கழட்டி பையில வையுங்க’ என்று கூறியுள்ளனர். பயந்துபோன மோகனா நகையை கழட்டியுள்ளார். அந்த இரண்டு நபர்களும் நகையை வாங்கி அவர்களே பையில் வைத்துள்ளனர்.
பின்னர், சட்டென நகையை தூக்கிக்கொண்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் ஓடியுள்ளனர். மோகனா கத்திக் கூச்சலிட்டுள்ளார். ஆனால் அதற்குள் அவர்கள் கண்ணுக்கெட்டாத தொலைவிற்கு சென்றுவிட்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மோகனா கூறியுள்ள அடையாளங்களை வைத்து காவலர்கள் அந்த இரண்டு திருடன்களையும் தேடி வருகின்றனர்.
Loading More post
“அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்”- ஓபிஎஸ்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை: நாளை நேரில் ஆஜராகுகிறாரா ரஜினி?
ஜனவரி 21-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஊழியர் மரணம்: காரணம் வேறு என்கிறது உ.பி அரசு
நீதிபதிகள் நியமனம் குறித்த குருமூர்த்தி பேச்சு: சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அர்னாப் கோஸ்வாமியின் 'லீக்'கான வாட்ஸ்அப் சாட்... இந்த தேசம் தெரிந்துகொள்ள 'சொல்வது' என்ன?!
கொரோனா தடுப்பூசியை யார் போடலாம்; யார் போடக்கூடாது? கோவாக்சின் பற்றிய முழுத் தகவல்
திடீர் மழையால் 'கருப்பான' பொங்கல்: நீரில் மூழ்கிய பயிர்கள்... வேதனையில் விவசாயிகள்!
பரிசோதனை முழுமைபெறாத கோவாக்சின் தடுப்பூசியை இந்திய அரசு வாங்குவது ஏன்? எழும்பும் கேள்விகள்