ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் சென்னையில் 9 அடுக்கு வாகன நிறுத்தம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
சென்னையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாக தியாகராய நகர் உள்ளதால், அங்கு வாகன நிறுத்துமிடம் கட்ட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தியாகராய சாலை மற்றும் தணிகாசலம் சாலை சந்திப்பில் வாகன நிறுத்த கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ரூ.36 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில், கட்டவுள்ள வாகன நிறுத்தத்திற்கான பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 9 தளங்கள் கொண்டதாக அமைக்கப்படும் இந்த வாகன நிறுத்தத்தில், 800 வாகனங்கள் வரை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுமுற்றிலும் தானியங்கி முறையில் செயல்படும் வகையில் செயல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ஊரக தொழில்துறை அமைச்சர்பெ ன்ஜமின் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Loading More post
"அரசியலை விட்டு ஒதுங்குகிறேன்... தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றுங்கள்" - சசிகலா அறிக்கை
திமுக உடனான 2ம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் விசிக பங்கேற்கவில்லை
”கூட்டணிக்காக அதிமுகதான் கெஞ்சுகிறது; தேமுதிக கெஞ்சவில்லை” - எல்.கே.சுதீஷ் பேச்சு
பாலியல் சிடி விவகாரம்: கர்நாடகா அரசுக்கு தலைவலி... என்ன செய்யப்போகிறார் எடியூரப்பா?
”கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும்” - கமல்ஹாசன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?