குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் பா.ஜ.க. கவுன்சிலரை அப்பகுதி மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்தனர்.
வதோதராவில் உள்ள மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தின் முன்னால் இருந்த சில குடிசைகளை அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் நேற்று இடித்து தள்ளினர். மாநகராட்சியின் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முன் கூட்டியே நோட்டீஸ் அனுப்பாமல் எப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறி பா.ஜ.க. கவுன்சிலர் ஹஸ்முக் படேலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஹஸ்முக் பட்டேல் சமாதானம் செய்ய முயற்சித்தார்.
ஆனால், பா.ஜ.க. கவுன்சிலர் கூறியதை அவர்கள் ஏற்கவில்லை. ஆத்திரமடைந்த மக்கள் ஹஸ்முக் படேலை திடீரென தாக்கத் தொடங்கினர். அதோடு அவரை அருகிலுள்ள மரத்தில் கட்டி வைத்து உதைத்தனர். இதுதொடர்பான புகைப்படங்கள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பா.ஜ.க. கவுன்சிலர் தாக்கப்பட்டது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 30க்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
Loading More post
சசிகலா இணைப்பு விவகாரம் : இபிஎஸ்–ஓபிஎஸ் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தியடைந்த அமித்ஷா
யார், யாருக்கெல்லாம் தபால் ஓட்டு : தேர்தல் ஆணையம் விளக்கம்
’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ - எல்.கே சுதீஷ் பதிவு!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பற்றிய முழுத் தகவல் 2 நாட்களில் தெரியவரும் - எல்.முருகன்
அதிமுகவுடன் அதிருப்தி... தேமுதிகவிடம் எஞ்சியிருக்கும் 'வாய்ப்புகள்' என்னென்ன? - ஒரு பார்வை
அதிகரிக்கும் சிலிண்டர் விலை.. சின்ன சின்ன கவனம் போதும்.. கேஸ் மிச்சப்படுத்தும் 11 வழிகள்!
வன்னியர்களுக்கு 10.5% சதவீத இடஒதுக்கீடு : சாத்தியமா, சட்டச்சிக்கல் உள்ளதா? - விரிவான அலசல்
வாழ்வா, சாவா போராட்டத்தில் கம்யூனிஸ்ட், காங்கிரஸ்... எப்படி இருக்கிறது கேரள தேர்தல் களம்?