இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 49 தமிழக மீனவர்களை வரும் 22ம் தேதி வரை காவலில் வைக்க ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெடுந்தீவு, காரைநகருக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 49 பேரை எல்லைத்தாண்டி வந்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களின் 12 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த கைது நடவடிக்கையின் போது, கடலில் தவறி விழுந்த இலங்கை கடற்படை வீரரை மீட்ட கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 4 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். சமீபத்தில் நல்லெண்ண அடிப்படையில் 77 மீனவர்களை இலங்கை அரசு விடுவித்த நிலையில், நேற்று ஒரே நாளில் 49 பேர் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடைய ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 49 மீனவர்களையும் வரும் 22ம் தேதி வரை யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Loading More post
கமல் நிதானமாக கற்றுக்கொள்வார்: பொன்ராஜ் நம்பிக்கை
“வாக்கு வங்கி அரசியலால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது” - பரப்புரையில் பிரதமர் மோடி
6 கர்நாடக அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு செய்திகளை வெளியிட நீதிமன்றம் தடை
உலக மல்யுத்த வீராங்கனைகள் பட்டியல்: முதலிடத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகாட்
சென்னையில் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பாக இதுவரை 24 வழக்குகள் பதிவு
“6 தொகுதிக்கு கட்டாயப்படுத்தவில்லை; வேண்டுகோள் வைத்தார்கள்” திருமாவளவன் சிறப்பு பேட்டி
ஓவைசி Vs அப்பாஸ் சித்திக்... மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு சாதகமா? - ஒரு பார்வை
ராகுல் காந்திக்கு பலப்பரீட்சை: காங்கிரஸின் 'ஜி-23' தலைவர்களால் சிக்கல் ஏன்?
“அவன் அடிச்சதே ஆண்டர்சன் பால்ல தான்யா..” பொளந்து கட்டிய ‘மான்ஸ்டர்’ ரிஷப் பண்ட்!