தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, தமிழக அரசு மற்றும் அமைச்சர்களை விமர்சித்து 2013, 2014ஆம் ஆண்டுகளில் பேசியதாக தேமுதிக மீது தமிழக அரசு சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன. 2012-16 வரை தமிழக அரசு சார்பில் மொத்தம் 5 வழக்குகள் தொடரப்பட்டன. இத்துடன், பிற வழக்குகளையும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்த வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் விஜயகாந்த் ஆஜராகி வந்தார்.
இந்நிலையில், விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்ககுளை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதனையடுத்து, அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் முடித்து வைத்தது. 5 வழக்குகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், பிற 3 வழக்குகளை டிசம்பர் 16 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மொழிபெயர்ப்புக்கு ஆள் கேட்ட ராகுல்..! - அசத்திய பள்ளி மாணவி
என்ன சொல்கிறது குடியுரிமை சட்டத் திருத்த மசோதா..?
“விலையேற்றத்தை கேட்டால், வெங்காயம் சாப்பிடுவதில்லை என்கிறார் நிதியமைச்சர்” - ராகுல் காட்டம்
“வெங்காயம், பூண்டு, மாமிசம் என எல்லாவற்றையும் சாப்பிடுவதை நிறுத்துங்கள்” - ஆசம் கான்
“ரிஷாப் தவறவிட்டால், ஸ்டேடியத்தில் தோனி பெயரை ரசிகர்கள் கத்துகிறார்கள்” - விராட் வருத்தம்