உசிலம்பட்டி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
உசிலம்பட்டி அருகே லாரியும் ஷேர் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். பள்ளி மாணவிகள் உள்பட 3 காயமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் உசிலம்பட்டியிலிருந்து பாறைப்பட்டி நோக்கி சென்ற லாரியும், ஜோதில் நாயக்கனூரிலிருந்து உசிலம்பட்டி நோக்கி சென்ற ஷேர் ஆட்டோவும் நேருக்கு மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரு பள்ளி மாணவிகள் உள்பட மூன்று பேர் படுகாயமடைந்தனர். விரைந்து வந்த காவல்த்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவ இடத்தில் உயிரிழந்த ஆறு பேரில் கோடாங்கி நாயக்கன்பட்டி அசோக், ஜோதிநாயக்கனூர் முத்துலெட்சுமி, வாசியம்மாள், தாடையம்பட்டி சத்யா மற்றும் கீழப்புதூரைச் சேர்ந்த குருவம்மாள் என ஐந்து பேரின் அடையாளங்களை கண்டறிந்துள்ளனர். மேலும் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்வு பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி பகுதியில் ஷேர் ஆட்டோக்களால் ஏற்படும் விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது உசிலம்பட்டி பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடியுரிமை மசோதா நிறைவேற்றம் முதல் கார்த்திகை தீபம் வரை #TopNews
குடியுரிமை திருத்த மசோதா நகலை மக்களவையில் கிழித்த ஓவைசி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
ஊராட்சித் தலைவர் பதவி ஏலம்? - மாவட்ட ஆட்சியர் விளக்கம்
நித்தியானந்தா எங்கு இருக்கிறார்? - அரசுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் கேள்வி
“என்கவுன்ட்டர் மகிழ்ச்சியான விஷயம் அல்ல” - மௌனத்தை கலைத்த சமந்தா
‘வர்லாம் வர்லாம் வா...’.. 80 வயதிலும் தளராத மனம்.... யார் இந்த சுல்தான் தாத்தா..!
தாயின் குரலை முதன்முதலாக கேட்கும் குழந்தையின் ரியாக்ஷன்: மனங்களை வென்ற வீடியோ!
பெண்களுக்கு என்ன கற்றுக்கொடுக்க வேண்டும்?: மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பெண்ணின் அசத்தல் பதில்!