பெருமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.1000 கோடி நிதியுதவி அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை திமுக எம்எல்ஏக்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் நேரில் வழங்கினர். அதில், வாழ்வாதாரங்களை இழந்து துன்பத்தில் வாடும் மக்களை சந்தித்து ஆறுதல் கூறுவது பொறுப்புள்ள எதிர்க்கட்சி தலைவரின் கடமையே தவிர விளம்பரம் நோக்கம் ஏதும் இல்லை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டத்தின் சாலை உட்கட்டமைப்பு அடியோடு சாய்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே நீலகிரி மாவட்டத்தில் சீரமைப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், பேரிடர் பாதித்த மாவட்டமாக நீலகிரியை அறிவிக்க வேண்டும் எனவும் முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்