சென்னை தரமணி காவல்நிலையத்தைச் சுற்றி பூங்கா அமைத்து பராமரித்துவரும் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தரமணி காவல்நிலையத்தில் எம்.எஸ்.பாஸ்கர் என்பவர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். பல்வேறு பிரச்னைகளினால் புகார் அளிக்கவரும் மக்களின் மன உளைச்சலைப் போக்க நினைத்த இவர், புது விதமாக சிந்திக்கத் தொடங்கினார். இதன் காரணமாக காவல்நிலையத்தைச் சுற்றி பசுமையான பூங்கா ஒன்றை அமைப்பதற்காக ஆய்வாளர் பாஸ்கர் திட்டமிட்டார்.
அதன்படி, செயற்கை புற்கள் மூலம் காவல்நிலைய வளாகத்தை பசுமையான சூழலுக்கு மாற்றியுள்ளார். இவரது முயற்சியில் பல வகையான மூலிகைச் செடிகள், பழம் தரும் மரங்கள், மலர் செடிகளுடன் கூடிய அழகிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புகார் கொடுக்க காவல்நிலையம் வரும் மக்கள், பூங்காவின் பசுமையைக் காணும்போது மனஉளைச்சலில் இருந்து மீள முடியும் என பாஸ்கர் கூறியுள்ளார். இவரைப் போன்றே, மற்ற காவல்நிலைய ஆய்வாளர்களும், தங்களின் காவல்நிலையங்களை சுற்றி பசுமையான சூழலை உருவாக்க திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் பொருட்கள் மீதான சுங்க வரி 200% ஆக உயர்வு
கார் வெடிகுண்டு தாக்குதல் - இந்தியாவுக்கு புதிய அச்சுறுத்தல்?
“40 ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.5 லட்சம்” - சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
8 ஆண்டுகள் சுகாதாரத்துறை செயலாளராக இருந்த ராதாகிருஷ்ணன் அதிரடி மாற்றம்
சிஆர்பிஎப் வீரரின் கடைசி செல்ஃபி, கடைசி தொலைபேசி உரையாடல்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !