மறைந்த பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் அனைத்து மாநில பாஜக தலைவர்களிடம் ஒப்படைத்தனர்.
டெல்லியில் நடைபெற்ற, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தியை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சார்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, வாஜ்பாயின் அஸ்தியை பெற்றுக் கொண்டனர்.
தமிழகம் சார்பில் மாநில பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாஜ்பாய் அஸ்தியை பெற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து தமிழகம் கொண்டு வரப்படும் வாஜ்பாயின் அஸ்தியானது சென்னை, ராமேஸ்வரம் உட்பட 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது.
புல்வாமா தாக்குதல் எதிரொலி : மும்பையில் இம்ரான் கான் புகைப்படம் மறைப்பு
சிஆர்பிஎஃப் வீரரின் இறுதி சடங்கில் செல்ஃபி எடுத்த மத்திய அமைச்சர்
“40 வீரர்கள் இழப்பு என் இதயத்தில் தீயாக எரிகிறது” - பிரதமர் மோடி
“போலிகளை பரப்பாதீர்கள்” - நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் வேண்டுகோள்
தமிழக அரசு அதிகாரிகளுக்கு 2 மில்லியன் டாலர் லஞ்சம் : ஐ.டி நிறுவன நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !