விளையாட்டை நேசிக்கும் இந்தியாவை விளையாடும் தேசமாக மாற்றுவோம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் நேற்று காங்கிரஸ் கட்சியின் அமளியால் எம்.பியான சச்சின் டெண்டுல்கர் பேச முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சச்சின் தாம் சொல்ல விரும்பிய கருத்தை பேஸ்புக்கில் வீடியோவாக பதிவிட்டுள்ளார். அதில், விளையாட்டை விரும்பும் நாடாக உள்ள இந்தியாவை, விளையாடும் தேசமாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்தக் கனவு நனவாக, அனைவரும் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் கொண்டுள்ளார்.
மாநிலங்களவை நியமன உறுப்பினரான சச்சின், முதல் முறையாக நேற்று நாடாளுமன்றத்தில் பேச முயன்றார். விளையாட்டு உரிமை மற்றும் இந்தியாவில் விளையாட்டின் எதிர்காலம் குறித்த தலைப்புகளில் அவர் பேசவிருந்தார். அப்போது, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அவதூறு கூறியதாக பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், சச்சின் பேச முடியாமல் போனது.
நிர்மலா தேவி விவகாரம்: உதவி பேராசிரியர் முருகன் கைது
தமிழ் மொழியில் ரயில் டிக்கெட்: பயணிகள் மகிழ்ச்சி
காவிரியை விட மெரினா முக்கியமா?: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
பிரிட்டன் இளவரசர்- கேத் தம்பதிக்கு 3-வது குழந்தை: தாயும், சேயும் நலம்
பெண் சிசுவை பாலினம் பார்த்து அழித்த மருத்துவர் கைது: இளம்பெண் உயிரிழப்பு
மறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை ! சச்சினின் கிளாஸான இன்னிங்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்