சந்திரயான்-2 விண்கலம் 2 மாதத்தில் நிலவின் தென் துருவத்தை ஆராயத் தொடங்கும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சந்திரயான்-2 விண்கலம் வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திரயான்-2 விண்கலத்தை அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதிக் கட்ட பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சந்திரயான்-2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரில் பார்க்க மேட்டுப்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இருந்து 4 மாணவர்கள் செல்லவுள்ளனர். அப்பள்ளியில் படிக்கும் முகமது தாஹீர், சந்தோஷ், மணிகண்டன், ஹரிகிருஷ்ணா ஆகிய மாணவர்களே இஸ்ரோ செல்லவுள்ளனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த பின் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், விண்ணுக்கு மனிதனை அனுப்பும் திட்டம் 2022 க்குள் நிறைவேற்றப்பட உள்ளது. சந்திரயான்-2 விண்கலம் இன்னும் 2 மாதத்தில் நிலவின் தென் துருவத்தை ஆராயத் தொடங்கும்” எனத் தெரிவித்தார்.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்