அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தளபதி63’ ல் நடிகர் விவேக் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘சர்கார்’ படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கவுள்ள திரைப்படம் ‘தளபதி63’. பெயரிப்படாத இந்தப் படத்தினை அட்லி இயக்குகிறார். இவர் ஏற்கெனவே ‘தெறி’, ‘மெர்சல்’ உள்ளிட்ட இரண்டு படங்களை விஜய்யை வைத்து இயக்கி உள்ளார். வசூல் ரீதியாக மிகப் பெரிய வெற்றியை இந்த இரு படங்களும் ஈட்டின. இதனை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் மூலம் பெரிய இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக இணைகிறார்.
இந்நிலையில், ‘தளபதி63’ படத்தில் விஜய், கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று தகவல் வெளியாகின. இதற்காக, கால்பந்து பயிற்சியையும் அவர் தொடங்கியதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இந்தத் திரைப்படம் மார்ச் மாதம் தொடங்கவுள்ளதாகவும் தீபாவளிக்கு படம் ரீலிஸ் ஆகவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களில் பெயர்களை படக்குழு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் படத்தில் நடிகர் விவேக் நடிக்க இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள இயக்குநர் அட்லி, ''நடிகர் விவேக்கின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரை இயக்க வேண்டுமென்பது என் நீண்டகால ஆசை. மிக்க மகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார். அதற்கு பதிலளித்துள்ள நடிகர் விவேக், ''நீங்கள் சொல்வது அத்தனை இனிமையாக இருக்கிறது. உங்களுடனும், சகோதரர் விஜயுடன் பணியாற்றவும் நான் ஆவலாக இருக்கிறேன். மனிதாபிமானம் மிக்க நல் இதயம் கொண்ட விஜய் அவர்களுடன் மீண்டும் இணைவது எனக்கும் அவரது ரசிகப்பெருமக்களுக்கும் பெருமகிழ்ச்சி'' என்று தெரிவித்துள்ளார்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் நடித்த கதிரும் ‘தளபதி63’ நடிக்க இருப்பதாக படக்குழு அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஓடும் பேருந்தில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர்..! - தர்மஅடி கொடுத்த மக்கள்
குளத்தில் மூழ்கிய தாயை காப்பாற்ற நீரில் இறங்கிய சிறுமி - சோகத்தில் முடிந்த போராட்டம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
ட்விட்டரில் யார் டாப் ? - ட்விட்டர் இந்தியா வெளியிட்ட பட்டியல்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
இது என்ன ‘வகுப்புவாத மசோதாவா..?’ - அமித்ஷாவுக்கு ஐஏஎஸ் சசிகாந்த் பகீரங்க கடிதம்
கலைச்சுடர்மணி விருதை திரும்ப கொடுக்க வந்த தவில் கலைஞர் - காரணம் இதுதான்..!
“அக்ஷ்யா உயிருடன் இல்லை.. ஆனால் அவரின் எழுத்துகள் அழியவில்லை”- அஞ்சலி செலுத்தும் பள்ளி..!
“நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணியை செய்யத் தயார்”-தமிழக கான்ஸ்டபிள் விருப்பம்