முகநூல் விளம்பரத்தின் மூலம் அகமதாபாத்தைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் ஒருவரை தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஹைடெக் திருடர்கள் ஏமாற்றி உள்ளனர். பாதிக்கப்பட்ட பொறியாளரிடம் குறைந்த விலையில் ஐபோன் 11 போன் தருவதாக சொல்லி இந்த மோசடி வேலையை திருடர்கள் மேற்கொண்டுள்ளனர். அது தொடர்பாக ஏமாற்றப்பட்ட 27 வயதான பொறியாளர் கந்தர்ப் பட்டேல் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
“கடந்த ஜனவரி மாதம் எனது முகநூல் பக்கத்தில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் 70000 ரூபாய் மதிப்புள்ள ஐபோன் 11 போன் வெறும் 24000 ரூபாய்க்கு கிடைப்பதாக சொல்லப்பட்டிருந்தது. உடனடியாக நான் அதிலிருந்து எண்ணை தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் போனை எடுத்தவர் தன்னை ‘ராணுவ அதிகாரி’ என சொல்லி அறிமுகம் செய்து கொண்டார்.
முதலில் 4000 ரூபாய் தபால் செலவுக்காக கொடுத்தேன். தொடர்ந்து ராணுவ வழக்கத்தின் படி போனின் மொத்த தொகையில் பாதியை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என சொல்லியதாகவும். அப்படி செய்தால் 24000 ரூபாய் போக மற்ற தொகை மீண்டும் எனது வங்கி கணக்கில் செலுத்தப்படும் என சொன்னார்கள். அதை நானும் நம்பி பணத்தை செலுத்தி விட்டேன். அப்படி ஒரு 60000 ரூபாய் வரை பணம் கொடுத்தேன். ஆனால் போன் எனக்கு வரவே இல்லை. அதனால் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்து புகார் கொடுத்துள்ளேன். குற்றவாளியை துரிதமாக கண்டுபிடிக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறேன்” என தனது புகாரில் கந்தர்ப் பட்டேல் தெரிவித்துள்ளார்.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!