இந்தியா, சீனா, நைஜிரியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானில் மட்டும் நுரையீரல் தொற்றால் ஆண்டுக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் மரணமடைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
இங்கிலாந்தின் எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹரீஷ் நாயர் தலைமையிலான குழு மூச்சு குழாயில் பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று குறித்து உலகம் முழுவதும் ஆய்வு மேற் கொண்டனர். அதில் ஆண்டுக்கு 3 கோடியே 30 லட்சம் குழந்தைகள் நுரையீரல் தொற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் 5 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இந்தியா, சீனா, நைஜிரியா, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த நோய் சுவாச உறுப்புகளை கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் 2-வது வயதில் அதிக அளவில் தாக்குகிறது. நுரையீரல் தொற்று நோயால் ஆண்டுக்கு 1 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் மேற்கண்ட 5 நாடுகளில் இறக்கின்றனர். இந்த எண்ணிக்கை நோயினால் சர்வதேச அளவில் இறப்பவர்களின் எண்ணிக்கையில் பாதி அளவாகும். இந்த நோயில் இருந்து மருந்து மாத்திரைகள் மூலம் குழந்தைகள் இறப்பை தடுக்க முடியும். அதற்கான மருந்து இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது என்று இந்திய வம்சாவளி நிபுணர் ஹரீஷ் நாயர் தெரிவித்துள்ளார்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்