போலி சான்று கொடுத்து 29 ஆண்டுகள் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி ஏமாற்றியவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த வீரப்பன் என்ற அவர், கடந்த 1984ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி தாவரவியல் படித்தார். ஆனால் தேர்ச்சி பெறவில்லை. இந்த நிலையில் பல்கலைக்கழக ஊழியர்கள் துணையுடன் போலி மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து 1987ம் ஆண்டு சென்னை வண்ணாரப்பேட்டை தியாகராயா கல்லூரியில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். 29 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றிய வீரப்பன் கடந்த ஆண்டு ஓய்வு பெற்றார்.
இந்த நிலையில் போலி சான்றிதழ் கொடுத்து வீரப்பன் பணியில் சேர்ந்ததாக கல்லூரி கல்வி இயக்குநர் அலுவலகத்துக்கு 2 மாதங்களுக்கு முன் புகார் வந்தது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் வீரப்பன், போலி மதிப்பெண் சான்று கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வீரப்பனை கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Loading More post
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
ஐபிஎல்லில் ஜொலித்தவர்களுக்கு வாய்ப்பு! தென் ஆப்பிரிக்க டி20 தொடர் - இந்திய அணி அறிவிப்பு
கீழடி 8ஆம் கட்ட அகழாய்வில் இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டெடுப்பு
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்