தமிழகத்தில் ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்தால் பயணிகளுக்கு இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
ரயில் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்ட உடன் அதனை உறுதிப்படுத்துவதற்கான குறுஞ்செய்தி, பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு அனுப்பப்படும். பொதுவாக ஆங்கிலத்தில் இந்த குறுஞ்செய்தி வரும். ஆனால் தற்போது இந்தியில் மட்டுமே குறுஞ்செய்தி வருவதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பல்வேறு ரயில் பயணிகள், நலச் சங்கங்கள் சார்பில் ரயில்வே அமைச்சகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது என்றும், ரயில்வே அமைச்சகம் இதில் கவனம் செலுத்தி அந்தந்த மாநில மொழிகளில் குறுஞ்செய்தியை அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு இதுபோல அனைத்து தளங்களிலும் இந்தியை திணிக்காமல், அந்தந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
@IRCTCofficial-ல் தொடர்வண்டி பயணச்சீட்டு பதிவு செய்தவுடன், உறுதிப்படுத்துதல் குறுஞ்செய்தி, இந்தியில் வருகிறது; இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது.
1/3 pic.twitter.com/Qqem8BX85N — தமிழச்சி (@ThamizhachiTh) October 4, 2020
Loading More post
இப்படி ஒரு சாண்ட்விச்சா? எப்பா ஆள விடுங்க - அலறும் Foodies; வீடியோ பகிர்ந்த ஒமர் அப்துல்லா
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
"என் கண்முன்னே மகனை சுட்டுக் கொன்றனர்"- லஞ்ச ஒழிப்புத்துறை மீது ஐஏஎஸ் அதிகாரி புகார்
என்னது.. 'ஃபாஸ்டேக்கை ஸ்கேன்' செய்து பணத்தை திருட முடியுமா? வைரலாகும் வீடியோ
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
ஆயுள் காப்பீடு எடுக்க தயாராகி விட்டீர்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க..!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'