ஆன்லைன் மூலமாக நடத்திய பாடம் புரியாத நிலையில் ஆசிரியர் மற்றும் பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த 10-ம் வகுப்பு பள்ளி மாணவன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் வசித்து வருபவர் பாண்டியன். அரசு ஒப்பந்த பணிகளை செய்து வரும் இவரின் மகன் அபிஷேக், திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தபட்டு வரும் நிலையில், அபிஷேக்கிற்கு ஆன்லைன் வகுப்பின் மூலமாக சொல்லி தரப்படும் பாடங்கள் புரியவில்லை எனத் தெரிகிறது. இதனால் சரிவர படிக்க முடியாமல் திணறி வந்துள்ளார்.
இந்நிலையில் ஆசிரியரும், பெற்றோரும் அபிஷேக்கினை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அபிஷேக் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆண்டிபட்டி காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!