இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தை வரும் ஜூலை 9ம் தேதி வரை நீட்டிப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் அமிதாப் சவுத்ரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பதவிக்காக முன்னரே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் coachappointment@bcci.tv என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விபரங்களை அனுப்பி வைக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் கடந்த மே 31ம் தேதியுடன் முடிவடைந்தது. டாம் மூடி, வீரேந்திர சேவாக் உள்ளிட்டோர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். அனில் கும்ப்ளே பதவி விலகலைத் தொடர்ந்து, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசத்தினை பிசிசிஐ நீட்டித்துள்ளது.
Loading More post
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?