கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை விதித்து மே 9ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து கைது நடவடிக்கையில் இருந்து தப்பிப்பதற்காக கர்ணன் தலைமறைவாக இருந்தார். கர்ணனை தீவிரமாக தேடி வந்த மேற்குவங்க காவல்துறையினர் கோவையில் அவரை கைது செய்து கொல்கத்தா அழைத்துச்சென்றனர். கொல்கத்தா விமான நிலையத்தில் நெஞ்சு வலிப்பதாக கர்ணன் கூறினார்.
இதையடுத்து, அவரது உடல்நிலை பரிசோதிக்கப்பட்டது. அங்கு அவரது உடல் நிலையை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, கர்ணனுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகக் காணப்பட்டது. அதனால் அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்பேரில் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
Loading More post
’பிரதமரை மேடையில் அமரவைத்து, தமிழக முதல்வர் இப்படி பேசலாமா?’ -அண்ணாமலை காட்டம்
மயிலாடுதுறை: ரூ.2 கோடி மதிப்புள்ள தொன்மையான உலோகச் சிலையை விற்க முயன்றவர் கைது!
’எங்களை விடுதலை செய்யுங்கள்’ - திருச்சி சிறையில் 10 இலங்கை தமிழர்கள் 7வது நாளாக போராட்டம்
’செந்தமிழ் நாடெனும் போதினிலே.. வந்தே மாதரம்’ - பிரதமர் பேச்சின் முக்கிய அம்சங்கள்!
ப. சிதம்பரம் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநிலங்களவைத் தேர்தல் வேட்பாளர்?
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!