பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து அரசுப் பள்ளி ஆசிரியை பலரது பாராட்டையும் பெற்றுள்ளார்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக பல தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சிறு, குறு தொழிலாளர்கள், அன்றாடம் வேலைக்கு போய் வருமானம் ஈட்டுபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வீடுகளுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து பலரது பாராட்டையும் பெற்றுள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியை.நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் கருப்பம்புலம் கிராமத்தில் உள்ளது ஞானாம்பிகா அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி. இப்பள்ளியில் 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இரு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கொரோனா அச்சுறுத்தலால் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் அப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் கமலவல்லி, மாணவர்களின் குடும்பத்திற்கு தன்னால் ஆன உதவியை செய்துள்ளார். ஒவ்வொரு மாணவரின் குடும்பத்திற்கும் ரூ.1000 ரொக்கம் வழங்கியுள்ளார். மேலும் சிலரின் குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகைப்பொருட்களையும் வழங்கியுள்ளார்.
இது குறித்து தெரிவித்த ஆசிரியர் கமலவல்லி, பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவருமே அன்றாடம் வேலைக்கு போய் வருமானம் ஈட்டுபவர்கள். கொரோனாவால் வருமானம் இன்றி தவிக்கும் அவர்களுக்கு என்னால் முடிந்த உதவியைச் செய்ய நினைத்தேன் என தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளி ஆசிரியரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஒரு மாதத்திற்கு பின் வீடு திரும்பிய செவிலியர்: மலர்தூவி வரவேற்பு அளித்த அக்கம்பக்கத்தினர்!
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!