கொரோனாவக் கட்டுப்படுத்த முதல்கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் மே3ம் தேதி வரை 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நேற்று நீட்டிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பின் அளவை பொருத்து சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அதிகம் பாதித்த பகுதிகளில் அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருப்பதால் ஏற்கெனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டவர்கள் குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையாக திருமணம் செய்துகொள்கின்றனர். சில இடங்களில் மணமகள் அருகில் இல்லை என்பதால் வீடியோ அழைப்பு விடுக்கப்பட்டு செல்போனுக்கு தாலிகட்டும் சம்பவமும் அரங்கேறியுள்ளன. இந்நிலையில் தந்தையின் ஆசையை நிறைவேற்றுவதற்காக மகன் ஒருவர் தன்னுடைய திருமணத்தை வீட்டுக்குள்ளேயே நடத்தி முடித்துவிட்டார்.
மத்தியப்பிரதேசத்தின் கவுதம்புராவில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இது குறித்து தெரிவித்த மணமகனின் அண்ணன், என் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் எனது தம்பியின் திருமணத்தை உடனடியாக நடத்தி பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டார். அதனால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று வீட்டிற்குள்ளேயே திருமணத்தை நடத்தி விட்டோம் எனத் தெரிவித்தார்.
பெண் மருத்துவரின் சேவையை வாழ்த்திய பிரதமர் மோடி - 6 லட்சம் லைக்ஸ் அள்ளிய வீடியோ
Loading More post
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்