தமிழகத்தை பொருத்தவரை 1,937 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதலமைச்சர் அறிவித்த சில பகுதிகளில் மட்டும் முழு பொது முடக்கம் தொடர்ந்து வருகிறது. மற்றபகுதிகளில் வழக்கமான பொதுமுடக்கமும் அமலில் உள்ளன.
இந்நிலையில் பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அறிவித்த முழு பொது முடக்கம் மறு உத்தரவு வரும் வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூரில் 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பெரம்பலூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றி 8கிமீ அளவுக்கு முழு பொதுமுடக்கம் இன்று வரை அமல்படுத்தப்பட்டது. அந்த முழு பொதுமுடக்கம் தற்போது மறு உத்தரவு வரும்வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உழவர்சந்தை, காய்கறி மார்க்கெட், இறைச்சிக் கடைகள் ஆகியவை திறக்க தடை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் மார்க்கெட் திறக்கத் தடை என்றும் டோர் டெலிவரி செய்ய அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நகராட்சி சார்பில் 54 வாகனங்களில் காய்கறி விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறிய மளிகைக் கடைகள் மட்டும் மதியம் 1 மணிவரை திறந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
கொரோனாவால் இறக்கும் மருத்துவர்களுக்கு இறுதி சடங்கு செய்யத்தயார்..! பெண் இன்ஸ்பெக்டர்
Loading More post
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?