மகாராஷ்டிராவில் அமைச்சர் ஒருவர் உள்பட ஒரே நாளில் 778 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அங்கு நோய் தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 6ஆயிரத்து 500ஐ நெருங்கியுள்ளது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் மும்பை தாராவியில் 214 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் அதிக அளவில் இருந்து வருகிறது. அம்மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 778 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா முழுவதும் 6, 427 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 840 பேர் குணமடைந்துள்ளனர். 283 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, தேசியவாத கட்சியைச் சேர்ந்த வீட்டுவசதித்துறை அமைச்சர் ஜிதேந்திர அவ்ஹாத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாலையில் தானே கெடுபிடி: கடல் வழியாக 1000கிமீ பயணம் செய்த தொழிலாளர்கள்!
மும்பையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில், நேற்று ஒரே நாளில் 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நெருக்கமான குடியிருப்புகளைக் கொண்ட இப்பகுதியில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது. இங்கு கொரோனா தொற்றால் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்