ஊரடங்கை மீறி சாலையில் வந்து டிக்டாக் வீடியோ செய்த இருவரை போலீசார் தேடிச் சென்று கைது செய்துள்ளனர்.
இந்தியாவை அச்சுறுத்தி வரும் கொரோனாவை சமாளிக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி மக்கள் வெளியே வர வேண்டாமென அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதனை மீறி தேவையில்லாமல் சாலையில் நடமாடுபவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊரடங்கை மீறி சாலையில் வந்து டிக் டாக் வீடியோ செய்த இருவரை போலீசார் தேடிச் சென்று கைது செய்துள்ளனர். மகாராஷ்டிராவைச் சேர்ந்த 24 மற்றும் 19 வயதான இரு இளைஞர்கள் ஊரடங்கை மதிக்காமல் சாலைக்கு வந்து டிக் டாக் வீடியோ எடுத்துள்ளனர்.
டிக் டாக் வீடியோவிலேயே போலீசாருக்கு சவாலும் விடுத்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. வீடியோவை வைத்து தகவல்களை திரட்டிய போலீசார் அவர்கள் இருவரையும் தேடிச் சென்று கைது செய்தனர். மக்களின் நலனுக்காகவே ஊரடங்கு அமலில் உள்ளதாகவும் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டுமென்றும் போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Loading More post
`கணவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை’ - கேரளா விஸ்மயா வழக்கின் தீர்ப்பு விவரம்
'இந்த ஐபிஎல் சீசனின் சிறந்த கேப்டன் இவர்தான்..' - சேவாக் புகழும் அந்த வீரர் யார்?
`கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது' - நீதிமன்றம் காட்டம்
'தமிழகத்திலிருந்து ஆந்திராவுக்கு அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தல்' - சந்திரபாபு நாயுடு கடிதம்
’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ - திருநாவுக்கரசர் எம்.பி
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்