தனி நபர்களுக்கான ஐந்து லட்ச ரூபாய்க்குட்பட்ட வருமான வரி நிலுவைத் தொகை உடனடியாக அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருப்பதையடுத்து மக்களின் அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில் சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டதால் நாட்டின் பொருளாதார நிலையானது கடுமையாக சரிவடைந்திருக்கிறது. இந்நிலையில், அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் தனி நபர்கள், நிறுவனங்கள் வங்கிகள், நிதி நிறுவனங்கள் வாங்கிய கடன்களுக்கு சில சலுகைகளை வழங்கினார்.அதன் பின்னர் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் பல சலுகைகளை வழங்கினார்.
கொரோனாவுக்கு மருந்தா ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் ? - பின்னணி என்ன ?
இதனை தொடர்ந்து கொரோனா பாதிப்புகளால் பொருளாதார ரீதியில் தவித்து வரும் தனி நபர்கள் மற்றும் தொழில், வணிக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தனி நபர்களுக்கான ஐந்து லட்ச ரூபாய்க்குட்பட்ட வருமான வரி நிலுவைத் தொகை உடனடியாக அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊரடங்கிற்கு முன் 18; இன்று 738 - தமிழகத்தில் நாளுக்குநாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
இதன் மூலம் 14 லட்சம் பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி, சுங்க வரி நிலுவைத் தொகைகளும் உடனடியாக விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் தொழில், வணிக நிறுவனங்கள் பலன்பெறுவர் என கூறப்பட்டுள்ளது. இவ்விரு தரப்பினருக்கும் மொத்தம் 18 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!