டெபிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் இனி பணம் எடுக்கலாம் என்று யெஸ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது யெஸ் வங்கி. இந்த வங்கி சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவு வாராக் கடனால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கூடுதல் நிதி திரட்டும் முயற்சிகள் தோல்வியடைந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் குழுமம் யெஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ரூ.600 கோடி லஞ்சம் பெற்றதாக புகார்: யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் மும்பையில் கைது
இந்நிலையில் யெஸ் வங்கியின் மோசமான நிதி நிலையை கருத்தில் கொண்டு, மத்திய அரசுடன் ஆலோசனை நடத்தி அந்த வங்கி நிர்வாகத்தை 30 நாட்களுக்கு எடுத்துக் கொள்வதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.
You can now make withdrawals using your YES BANK Debit Card both at YES BANK and other bank ATMs. Thanks for your patience. @RBI @FinMinIndia— YES BANK (@YESBANK) March 7, 2020
அறிவிப்புக்கு முதல்நாள் யெஸ் வங்கியிலிருந்து ரூ.265 கோடி எடுத்த குஜராத் நிறுவனம்
இந்தச் சிக்கல் காரணமாக யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம்களில் பணம் எடுக்க முடியாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாயினர். இந்நிலையில் நேற்று இரவு யெஸ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் "டெபிட் கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் யெஸ் வங்கி ஏடிஎம் அல்லது பிற வங்கிகளின் ஏடிஎம்களில் இனி பணம் எடுத்துக்கொள்ளலாம். வாடிக்கையாளர்கள் பொறுமை காத்திருந்ததற்கு நன்றி" என தெரிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பினால் யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.
Loading More post
2024 தேர்தல் கூட்டணி? - அகிலேஷ் யாதவை சந்தித்தார் சந்திரசேகர ராவ்
வாழ்வா? சாவா? போராட்டத்தில் டெல்லி: இன்று மும்பை அணியுடன் மோதல்
தமிழ்நாட்டில் இன்று குரூப்-2 தேர்வு - 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
'நாங்கள் கொலை செய்ய முயன்றோமா?' - மதுரை தம்பதிக்கு தனுஷ், கஸ்தூரி ராஜா நோட்டீஸ்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!