குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என எந்த மாநில அரசும் கூற முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க முடியாது என கூற மாநில அரசுகள் கூறுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் அல்லது அதனை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றலாம் என குறிப்பிட்ட கபில் சிபல், சட்டத்தை அமல்படுத்த முடியாது என கூறுவது சாத்தியமில்லை என தெரிவித்தார்.
சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என மேற்குவங்கம் மற்றும் கேரள அரசுகள் கூறி வருகின்றன. காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான கபில்சிபல், இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!