திருச்சி மாவட்டம் நவலூர்குட்டப்பட்டு அருகே, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
விவசாயியான ராமமூர்த்தி, மகன் குணசேகரன், தாய் ஒப்பாயி அம்மாளுடன், வயலுக்கு உரமிடுவதற்காக சென்றுள்ளார். அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த ராமமூர்த்தி, மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியுள்ளார். அவரை காப்பாற்ற முயற்சித்தபோது, குணசேகரனும், ஒப்பாயி அம்மாளும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கு இரு மின்கம்பங்களுக்கு இடையே இருந்த மின்கம்பி விழுந்ததே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மின்கம்பி அறுந்து வயலுக்குள் விழுந்து கிடந்ததாகவும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Loading More post
மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி தோல்வி: பெங்களூரு அணிக்கு அடித்த அதிர்ஷ்டம்
மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் மீது பாஜக நிர்வாகி சரமாரி தாக்குதல் - பரிதாபமாக உயிரிழப்பு
மே மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை... வரலாற்றில் முதல்முறை!
ஜம்மு: நெடுஞ்சாலை சுரங்கப்பாதை விபத்து - 10 தொழிலாளர்கள் சடலமாக மீட்பு
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!