மக்களவையை தொடர்ந்து குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் கடந்த திங்கட்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மக்களவையில் நீண்ட விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். அப்போது பேசிய அமித்ஷா, “பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு நாடுகளிலும் உள்ள சிறுபான்மையினரின் மக்கள் தொகை 20 சதவிகிதம் குறைந்துள்ளது. அவர்கள் அனைவரும் ஒன்று கொல்லப்பட்டிருக்க வேண்டும் அல்லது இந்தியாவிற்குள் தஞ்சம் அடைந்திருக்க வேண்டும்.
இந்த மசோதா இந்திய இஸ்லாமியர்களுக்கு எதிராக உள்ளது என்று சிலர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். அவர்களிடம் நான் கேட்க விரும்புவது ஒன்று தான். இந்த மசோதா எப்படி இந்திய இஸ்லாமியர்களுக்கு தொடர்புடையது? இந்திய இஸ்லாமியர்கள் எப்போதுமே இந்திய குடிமக்கள் தான். அவர்கள் மீது எப்போதும் ஒடுக்கு முறை கையாளப்படாது.
இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்கள் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நினைத்து கவலைப்பட தேவையில்லை. இந்த மசோதா அவர்களை பயம் கொள்ளச் செய்யும் வகையில் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அரசியலமைப்புச் சட்டத்தின் படி தான் செயல்படுகிறது. இந்த அரசின் ஆட்சியில் சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்” என்றார்.
Loading More post
34 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு: நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை
ஆப்பிள் பயனர்களுக்கு அபாய எச்சரிக்கையை வெளியிட்ட இந்திய அரசு! எதற்காக?
வாட்ஸ்அப் குரூப்களில் வருகிறது இரண்டு புதிய அப்டேட்கள்... முழு விவரம் இதோ!
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
கியான்வாபி மசூதி வழக்கு: வாரணாசி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க தடை
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்