டி-20 கிரிக்கெட் வரலாற்றில், அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சாதனை படைத்துள்ளார் இலங்கை பந்துவீச்சாளர் கசுன் ரஞ்சிதா.
இலங்கை கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி அடிலெய்டில் இன்று நடந்தது. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து 2 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது. கேப்டன் ஆரோன் பின்ச் 36 பந்துகளில் 64 ரன்களும் மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 62 ரன்களும் டேவிட் வார்னர் 100 ரன்களும் எடுத்தனர். பின்னர், களமிறங்கிய இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.
இந்தப் போட்டியில், இலங்கை பந்துவீச்சாளர் கசுன் ரஞ்சிதா, 4 ஓவர்கள் வீசி 75 ரன்களை விட்டுக்கொடுத்தார். இதன் மூலம் சர்வதேச டி-20 வரலாற்றில் அதிக ரன்களை வாரி வழங்கிய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார். இதற்கு முன், செஸ் குடியரசுக்கு எதிரான போட்டியில் துருக்கியின் துனஹன் துரன் 70 ரன்கள் விட்டுக் கொடுத்ததிருந்ததே மோசமான சாதனையாக இருந்தது. அதை முறியடித்திருக்கிறார் கசுன் ரஞ்சிதா.
Loading More post
புதிதாக திறக்கப்பட்ட கருணாநிதி சிலையின் பீடத்தில் பொறிக்கப்பட்டுள்ள 5 கட்டளைகள்!
கால் உடைந்த ’நாட்டு நாய்’ குட்டி - சிகிச்சை அளிக்க 5 கி.மீ. தூரம் நடந்தே சென்ற சிறுவர்கள்!
38 ஆண்டுகளுக்கு பின்..! கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார் குடியரசு துணைத்தலைவர்!
‘உதவியும் செய்துவிட்டு கச்சதீவை மீட்போம் என்று ஸ்டாலின் கூறுவதா?’ - யாழ்ப்பாணம் மீனவர்கள்
தென் தமிழகத்தில் முதல்முறையாக மதுரையில் கணைய, சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?