முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி நாளை அளிக்கவுள்ள மதிய விருந்தின்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்திலேயே நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத், ஐக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்றும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மமதா பானர்ஜி, சோனியா காந்தியுடன் தனியாக இன்று சந்தித்துப் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மதிய விருந்து கூட்டத்திற்கு சிபிஎம், சமாஜ்வாதி கட்சி, திமுக. தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு பொதுவான வேட்பாளரை நிறுத்துவதுடன் குஜராத், ஹிமாசலப் பிரதேசம், கர்நாடக சட்டப்பேரவைகளுக்கு நடைபெறும் தேர்தலுக்கான கூட்டணியாக உருவாக்கவும் முயற்சி எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!