Published : 20,Sep 2019 08:17 AM

நடிகர்களின் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்

Pon-Radhakrishnan-about-banner

எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒரு கட்டவுட் ஒரு பேனர் கூட வைக்க அனுமதிக்கக் கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “ நமது நாட்டின் ஒரு அங்கமாக விளங்கிக் கொண்டிருக்கும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டு இருந்த நிலையை மாற்றி ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக காஷ்மீரை பிரதமர் மோடி மாற்றியிருக்கிறார். நாடுமுழுவதும் அரசியலமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை இதன்காரணமாக அகற்றி இருக்கின்றோம்.

வருகின்ற அக்டோபர் 2-ஆம் தேதி முதல் நாடு முழுவதிலும் இருக்கக்கூடிய மக்களை சந்தித்து அவருடைய கொள்கைகளை விவரிக்கும் வகையில் பாத யாத்திரைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. 15 நாட்கள் தினசரி 10 கிலோ மீட்டர் இந்த பாதயாத்திரை நடைபெறும். ஹிந்தி எதிர்ப்பு எனக் கூறிக்கொண்டு மக்களை திசை திருப்பி சிலர் அரசியல் ஆதாயம் தேடி வருகின்றனர். உள்துறை அமைச்சர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியை அனைத்து மாநிலங்களிலும் திணிக்கக் கூடாது என சிதம்பரம் கூறுவதில் ஆச்சரியமில்லை. அவர் உள்துறை அமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் ஹிந்தியை கொண்டுவர முயன்று தோற்று போனது. அதன் வெளிப்பாடே இந்த வார்த்தைகள். நடிகர்கள் கூறும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. அவர்களும் நாட்டின் குடிமக்களே.

மக்கள் நீதி மையத்தின் சார்பில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டது..? திரைப்படத்துறையில் எத்தனை பேனர்கள் வைக்கப்பட்டது..? இறந்தகாலத்தில் நடந்தவற்றைக் கூறி யாரும் ஒருவரை ஒருவர் மூக்கறுத்து கொள்ள வேண்டாம். எந்தக் கட்சியாக இருந்தாலும் ஒரு கட்டவுட் ஒரு பேனர் கூட வைக்க அனுமதிக்கக் கூடாது. எந்த ஒரு கோவில், மசூதி மற்றும் சர்ச்  நிகழ்ச்சியில் பேனர் வைக்க கூடாது.

தமிழன் என்ற முறையில், தமிழ்  இந்தியா முழுவதும் பரவ வேண்டும் என்பதில் எனக்கும் ஆசை உள்ளது. ஆனால் அதற்கான வேலைகளை சீரிய முறையில் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்