பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தர் மேற்கொண்ட முயற்சியால், 4 மாதங்களாக சவுதியில் இருந்த தமிழரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, பாரிவேந்தருக்கு உயிரிழந்தவரின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்கு உட்பட்ட பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி என்பவர் சவுதியில் வேலைபார்த்து வந்ததாக கூறப்படுகிறது. 4 மாதங்களுக்கு முன், அவர் திடீரென தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உடலை சொந்த ஊருக்கு எப்படி எடுத்து வருவது எனத் தெரியாமல் குடும்பத்தினர் கண்ணீரில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி இது பற்றிய தகவலை அறிந்த பாரிவேந்தர், சவுதியில் உள்ள கந்தசாமியின் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். மேலும், வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தார். இதன் காரணமாக கந்தசாமியின் உடல் சவுதியில் இருந்து இன்று தமிழகம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, பாரிவேந்தருக்கு கந்தசாமியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!