தன்னை கன்னத்தில் அறைந்த பயணியை சுங்கச்சாவடி பெண் ஊழியர் திருப்பி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குர்கான் கெர்கி தவுலா சுங்கச்சாவடிக்கு காரில் வந்த பயணி ஒருவர் சுங்க வரி செலுத்தாமல் செல்வதற்கு அடையாள அட்டை ஒன்றை காண்பித்துள்ளார். அப்போது சுங்க வரி வசூலித்து வந்த பெண் ஊழியர் ஒருவர் அந்த அடையாள அட்டை செல்லாது எனவும் சுங்க வரியை செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார் டிரைவர் திடீரென பெண் ஊழியரை கன்னத்தில் அறைந்தார். இதை சற்றும் எதிர்ப்பாராத ஊழியர் அவரை திருப்பி அறைந்தார். மீண்டும் அந்த பெண்ணை காரில் வந்த நபர் தாக்கினார். இதைத்தொடர்ந்து அந்த பெண் ஊழியர் வெளியே சென்று அவரை தாக்கினார். அருகில் இருந்தவர்கள் சண்டையை தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த குருக்ராம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற பயணியை சம்பவம் நடந்த இரண்டு மணி நேரத்தில் கைது செய்தனர்.
Loading More post
உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறதா? அப்போ இவற்றை கவனியுங்க...
சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை - நுபுர் சர்மாவுக்கு எதிராக 'லுக் அவுட்' நோட்டீஸ்
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?
முகமது ஜூபைருக்கு பாகிஸ்தானில் இருந்து நிதியுதவி - டெல்லி போலீஸ் தகவல்
இந்தியாவில் நிலத்தடி நீர்மட்டத்தின் தற்போதைய நிலை?
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்