மத்திய பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்கள் கழிவறைகளை சுத்தம் செய்தது தொடர்பாக அந்த மாவட்டத்தின் ஆட்சித் தலைவர் தன்வி விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தின் கந்துவா மாவட்டத்தின் சின்ஹாரா கிராமத்தில் ஒரு அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த அரசுப்பள்ளியில் மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் வீடியோ பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த வீடியோவில் பள்ளி மாணவர்கள் பள்ளியின் கழிவறையை மாப் வைத்து சுத்தம் செய்யும் காட்சி பதிவாகி இருந்தது. இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த வீடியோ குறித்து மாவட்ட ஆட்சியர் தன்வி சுந்தரியல் (Tanvi Sundriyal) விளக்கம் அளித்துள்ளார். அதில், “மாணவர்கள் கழிவறைகளை சுத்தும் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. அவர்களுக்கு சுத்தம் தொடர்பாக பயிற்சி கல்வியே அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆகவே இதில் எந்தவித தவறுமில்லை” எனத் தெரிவித்துள்ளார். ஆட்சியரின் இந்தக் கருத்து மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!