முதலீடுகளை ஈர்க்கவே வெளிநாடு செல்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து, அமெரிக்கா, மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்தார்.
அப்போது பேசிய அவர், “தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டு அதை செயல்படுத்தவும் வெளிநாடுகளுக்கு செல்கிறேன். நான் தொழிலதிபர் இல்லை. விவசாயி. முதலீட்டாளர்கள் அழைத்ததாலேயே வெளிநாடு செல்கிறேன். ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்லும் மர்மம் என்ன? அப்போது நீங்கள் எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. சொந்த விஷயத்திற்காக அவர் வெளிநாடு செல்வதாக சொல்கிறார். அந்தச் சொந்த விஷயம் என்ன? அதை அவர் தெளிவுபடுத்தவில்லை. ஆனால் நான் வெளிநாடு செல்வதை ஸ்டாலின் கொச்சைப்படுத்தி பேசுகிறார்” எனத் தெரிவித்தார்.
இன்று காலை சென்னையில் இருந்து புறப்படும் முதலமைச்சர் முதலில் லண்டன் செல்கிறார். செப்.2 ஆம் தேதி நியூயார்க் சென்று அமெரிக்கவாழ் தமிழ் மக்களிடம் கலந்துரையாடுகிறார். செப். 8, 9 தேதிகளில் துபாய் தொழில் முனைவோர் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
Loading More post
வருகிறது புது அப்டேட்! ஸ்டேட்டஸ் பிரிவை மிகவும் பயனுள்ளதாக மாற்ற வாட்ஸ்அப் திட்டம்!
அமித் ஷாவுக்கு துணிச்சல் இருந்தால் இதை செய்யட்டும்... ராஜஸ்தான் முதல்வர் சவால்
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?