56 வயது இந்திய ராணுவ அதிகாரி பிரான்சு நாட்டில் நடைபெற்ற பழமை வாய்ந்த மாரத்தான் சைக்கிள் போட்டியில் பங்கேற்று பந்தைய தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரலாக பணி புரிந்து வருபவர் அனில் பூரி (56). இவர் பிரான்சு நாட்டில் நடைபெற்று வரும் பழமை வாய்ந்த மாரத்தான் சைக்கிள் போட்டியில் பங்கேற்றார். அதாவது பிரான்சு நாட்டில் 1931ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் பாரிஸ்-பிரஸ்ட்-பாரிஸ் மாரத்தான் சைக்கிள் பந்தயம் நடைபெற்று வருகிறது. இதில் பந்தைய தூரம் 1200 கிலோ மீட்டர் ஆகும். இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இடைவிடாமல் சைக்கிளில் பயணித்து பந்தைய தூரத்தை கடக்க வேண்டும்.
இந்த மாரத்தான் சைக்கிள் போட்டியில் இந்திய ராணுவ அதிகாரி அனில் பூரி பங்கேற்று பந்தைய தூரத்தை கடந்து சாதனை படைத்துள்ளார். இது தொடர்பாக இந்திய ராணுவத்தின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று இடப்பட்டுள்ளது. அதில், “ராணுவத்தில் லெப்டினன்ட் ஜெனரல் பதவியிலிருக்கும் அதிகாரி ஒருவர் முதல் முறையாக பிரான்சின் பழமை வாய்ந்த மாரத்தான் சைக்கிள் பந்தைய தூரத்தை கடந்துள்ளார். 56 வயதான இவர் பந்தைய தூரத்தை 90 மணி நேரமும் இடைவிடாமல் சைக்கிளில் பயணம் செய்து கடந்து அசத்தியுள்ளார். இவர் இந்த 90 மணி நேரம் தூங்காமல் பந்தைய தூரத்தை எட்டியுள்ளார்” எனப் பதிவிடப் பட்டுள்ளது.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!