பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராத் கோலியின் கருத்துக்கு மதிப்பளிக்கப்படும் என்று கபில்தேவ் தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் பயிற்சியாளர் தேர்வு இந்த மாதம் நடக்கிறது. பயிற்சியாளரை தேர்வு செய்ய கபில்தேவ் தலைமையில் அன்ஷூமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோரை கொண்ட ஆலோசனை கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் பயிற்சியாளராக ரவிசாஸ்திரி நீடிக்க வேண்டும் என்று கேப்டன் விராத் கோலி விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கமிட்டி உறுப்பினர்களில் ஒருவரான கெய்க்வாட் கூறும்போது, ‘விராத் கோலியின் கருத்தை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. அது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம்தான் கருத்தில் கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தி ருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் பற்றி கபில்தேவ் கூறும்போது, ‘’ பயிற்சியாளர் தேர்வில் கேப்டன் விராத் கோலி உள்பட ஒவ்வொருவரின் கருத்துக்கும் மதிப்பளிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.
கமிட்டி உறுப்பினர்களில் மற்றொருவரான சாந்தா ரங்கசாமி, ‘பயிற்சியாளர் தேர்வு குறித்து கருத்து சொல்ல விராத் கோலிக்கு உரிமை இருக்கிறது. பயிற்சியாளரை நாங்கள் 3 பேரும் கூட்டாக விவாதித்து முடிவு செய்வோம்’ என்றார்.
Loading More post
இபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்கியதாக ஓபிஎஸ் ஆதரவாளர் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு
`பாட்டு பாடியே கொலை மிரட்டல்’- சென்னை இசையமைப்பாளர் மீது பெண் பாலியல் புகார்
தையல் கடைக்காரர் கழுத்தறுத்து கொடூர கொலை: தீவிரவாத தாக்குதலா? ராஜஸ்தான் விரைந்தது என்ஐஏ
இரட்டை இலை சின்னத்தை முடக்குவதுதான் பாஜகவின் லட்சியம் - நாஞ்சில் சம்பத் குற்றச்சாட்டு
நள்ளிரவில் நெரிசலுக்கு உள்ளாகும் பெங்களூரூ- சென்னை தேசிய நெடுஞ்சாலை: கவனிக்குமா நிர்வாகம்?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix