நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான உலகக் கோப்பை போட்டி மழையால் தாமதம் அடைந்துள்ளது.
உலகக் கோப்பை தொடரின் 33வது லீக் போட்டி நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே இன்று நடைபெறுகிறது. பிரிட்டனில் உள்ள எட்ஜ்பாஸ்டான் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி மழையால் தாமதம் அடைந்துள்ளது. 6 போட்டிகளில் 2 போட்டிகளை மட்டுமே வென்று புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணி இன்றைய போட்டியில் கட்டாயம் வெல்ல வேண்டிய சூழலில் உள்ளது. இல்லையேன்றால் அது அரையிறுதிக்குச் செல்லும் வாய்ப்பை இழக்க நேரிடும்.
எனவே அந்த அணி முழுமூச்சுடன் களம் காணும். அதேசமயம் 6ல் 5 போட்டிகளை வென்று 2வது இடத்தில் உள்ள நியூஸிலாந்து அணி இன்றைய போட்டியில் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். எனவே இந்த அணியும் வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறது. இதனால் இன்றைய போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே மழையால் தாமதமாகியுள்ள போட்டி, இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணியளவில் தொடங்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், ஓவர்களில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Loading More post
HDFC வாடிக்கையாளர்கள் கணக்கில் ரூ.13 கோடி வரவு எப்படி?- வங்கி அதிகாரிகள் விளக்கம்
தோனி, ரோகித், கோலி இல்லாத முதல் ஐபிஎல் பைனல்!
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி