திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 3 பேர் மற்றும் 50 கவுன்சிலர்கள், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ பாஜகவில் இணைந்தனர்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்திலுள்ள 42 தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் 22 இடங்களிலும், பாஜக 18 இடங்களிலும் வெற்றி பெற்றன. கடந்த தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாஜக இந்த முறை கூடுதலாக 16 இடங்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் திரிணாமுல் கட்சிக்கு இணையாக வாக்கு சதவீதத்தையும் பெற்றுள்ளது. தன்வசம் இருந்த 12 இடங்களை திரிணாமுல் இழந்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் 3 பேர், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு எம்.எல்.ஏ மற்றும் 50 கவுன்சிலர்கள் இன்று பாஜகவில் இணைந்தனர். குறிப்பாக 20 பெண் கவுன்சிலர்கள் பாஜகவில் இணந்துள்ளனர். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த இணைப்பு தொடர்ந்து நடைபெறும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வர்ஹியா கூறியுள்ளார். பாஜகவில் சேர்ந்த திரிணாமுல் முன்னாள் தலைவர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’, ‘பாரத் மாதா கீ ஜே’ என முழக்கமிட்டனர்.
மம்தா பானர்ஜியுடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக திரிணாமுல் கட்சியில் இருந்து 2017இல் வெளியே வந்த அக்கட்சியின் எம்.எல்.ஏ முகுள் ராய் தலைமையில் இந்த இணைப்பு நடைபெற்றது. “2021 சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட பிடிக்காது. திரிணாமுல் 143 சட்டசபை தொகுதியில் தோல்வியை சந்தித்துள்ளது. தோல்வியை சந்திக்கும் கட்சியில் இருக்க யாரும் விரும்ப மாட்டார்கள்” என்று கூறினார்.
ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் சரிவை சந்தித்துள்ள, முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு இது ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Two TMC MLAs and one CPM MLA from West Bengal join BJP at party headquarters in Delhi. More than 50 Councillors also join BJP pic.twitter.com/9cJ0gTn9FC— ANI (@ANI) May 28, 2019
Loading More post
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகை - என்னென்ன திட்டங்கள் தொடக்கம்?
மயிலாடுதுறை: சாலையில் சென்றுகொண்டிருந்த புல்லட் திடீரென தீப்பிடிப்பு
காங்கிரஸில் இருந்து விலகல்; சமாஜ்வாதி ஆதரவுடன் எம்.பி.யாகிறார் கபில் சிபல்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தை 'ஹேக்' செய்ய முயற்சி - விமானங்கள் புறப்படுவதில் தாமதம்
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!