பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்ஜியம்’ என காட்டியுள்ளது. அப்படியென்றால் தங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட டிடிவி தினகரனின், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் 3-வது இடத்திற்கே தள்ளப்பட்டது. அமமுகவின் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது டெபாசிட்டை இழந்தனர். இந்நிலையில் தேர்தல் தோல்வி குறித்து டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “ மக்களவை தேர்தல், சட்டமன்ற இடைத்தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்கிறோம். அதேசமயம் பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது. அப்படியானால் எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே?.. ஒரு வாக்குச்சாவடியில் அமமுக முகவரின் வாக்கு கூடவா பதிவாகாமல் போயிருக்கும்? இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தை அணுக இருக்கிறோம். தேர்தல் ஆணையம் தான் இதற்கு உரிய பதிலை அளிக்க வேண்டும்” என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 10 பேர் அமமுகவை விட்டு செல்வதால் கட்சிக்கு எந்த பாதிப்பும் இல்லை எனவும் சசிகலாவை வரும் 28-ம் தேதி சந்திக்க உள்ளதாகவும் கூறினார்.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
எல்லோருக்கும் பிடிக்குமா இந்தப் பட்டாம்பூச்சி ? - விமர்சனம்
குறைந்தது அடுக்குமாடி குடியிருப்பு மோகம்.. தனி வீடுகளை நோக்கி படையெடுக்கும் சென்னைவாசிகள்!
வருமான வரி தாக்கல் செய்பவர்கள் கவனத்துக்கு... இந்த ஆவணங்கள் எல்லாம் இருக்கிறதா?
இந்த 6 விஷயங்களை விஜய்யிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்! #HBDvijay
நேபாள நாட்டவர்கள் இந்திய ராணுவத்தில் சேரலாமா? - கூர்க்கா ரெஜிமென்ட் பின்னணி