பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்த வழக்கில் கைதானவர்களில் 7பேரின் நீதிமன்றக் காவலை நீட்டிப்பு செய்து நாமக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் பச்சிளம் குழந்தைகளை விற்பனை செய்தது தொடர்பான வழக்கினை சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான அமுதா கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி போலீசாரால் தேடப்பட்டு தலைமறைவாக இருந்த அமுதாவின் சகோதரர் நந்தகுமார் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதனால் தற்போதுவரை இந்த வழக்கில் தொடர்புடைய 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகேசன், அருள்சாமி, பர்வீன், ஹசீனா, லீலா, செல்வி, சாந்தி ஆகிய 7 பேரின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைவதை அடுத்து சிபிசிஐடி போலீசார் 7 பேரையும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதனைத்தொடர்ந்து நீதிபதி வடிவேல் 7 பேரையும் வரும் ஜூன் மாதம் 6-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 7 பேரும் சேலம் மத்திய சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். இவர்கள் 7 பேரும் ஏற்னெனவே ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தனர். இவர்களது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
Loading More post
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
சென்னையில் ‘ரூட் தல’ விவகாரம்: பயங்கர ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட கல்லூரி மாணவர்கள்
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?